பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளைப் புரிந்துக்கொள்ளல்
இன்று காலை 9:30 முதல் 11: 25 வரை தேர்விற்காக படித்துக் கொண்டு இருந்தேன். 11:30 முதல் 1:00 வரை தேர்வினை எழுதி முடித்தேன். எளிமையான வினாக்களாக கேட்கப்பட்டு இருந்தன. நான் முதல் 5 வினாக்களுக்கு விடையளித்தேன் . 1.வாழ்க்கை சார் கலைத்திட்டத்தின் முக்கிய அம்சங்களை விளக்குக. 2.பல்பாடத்துறை நோக்கில் அமைந்த கலைத்திட்டம் குறித்தும் அதன் பெருகிவரும் தேவை குறித்தும் விளக்குக. 3. விரிகள கலைத்திட்டம் பற்றி விவரி. மூன்று வினாக்களுக்கும் அதிக நேர கால அளவு எடுத்துக் கொண்டேன் . கலைத்திட்ட ஒருங்கிணைப்பிற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து விரிவாக விளக்குக. இந்த வினாவிற்கு 5 பக்கம் பதில் எழுதினேன். கடைசி இரண்டு கேள்விகளுக்கு குறைந்த அளவு ,நேரம் இருந்ததால் மூன்று பக்கம் மட்டும் விடையளித்தேன் .மதியத்திலிருந்து சாயங்காலம் வரை அடுத்த நாள் தேர்வான பாலினம் ,பள்ளி மற்றும் சமூகம் என்னும் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருந்தேன். நன்றி
Comments
Post a Comment