குழந்தை மையக் கல்வியின் பண்புகள்

  அறிவுத்தொகுப்பும் கலைத்திட்டமும் பாடவேளையில் பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டேன்.
   கல்வியில் குழந்தை, மைய இடம் வகிக்க வேண்டும் என்பதால், கல்வித் திட்டங்களும் செயல்பாடுகளும் குழந்தையின் உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி மற்றும் மனவெழுச்சி வளர்ச்சியை எதிரொளிப்பதாக அமைதல் வேண்டும்.
     ரூஸோவின் கருத்துப்படி
¡) குழந்தைகள் இயற்கையின் இனிய சூழலில் கல்வி கற்க வேண்டும்.
¡¡) குழந்தைகளின் இயல்பூக்கங்களையும், தற்போதைய மனப்போக்குகளையும் வைத்தே கல்வியை தொடங்குவது முக்கியம்.
¡¡¡) குழந்தையின் வளர்ச்சிநிலை, ஆர்வங்கள், உள்ளார்ந்த திறன்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப கல்விச் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
iv) புத்தகங்கள் மூலம் கற்றலுக்கும், வாய்மொழிக் கல்விக்கும் இடமில்லை.
v) கல்விச் செயல்முறைகள் யாவும் குழந்தையையும் அதன் தனித்தன்மையையும் மையமாக வைத்தே அமைந்திடல் வேண்டும்.
vi) குழந்தைகளை குழந்தைகளாக பாவிக்க வேண்டுமேயொழிய, வயது வந்தோர் தமது கருத்துகளை திணிக்க முயலக்கூடாது.
vii) குழந்தையின் தனித்தன்மை மதிக்கப்படுவதோடு, அவர்களது இயற்கை ஆர்வங்களான விளையாட்டு, எதையும் ஆராய்தறிதல் போன்றவையே கல்விச் செயல்பாடுகளின் அடிப்படையாக அமைதல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்